india

img

பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்பு

பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதிவியேற்றார்.

பாஜகவுடனான  கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ்குமார், நேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜேடியு, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட 7 கட்சிகளின் கூட்டணி அமைத்தது. இந்நிலையில், இன்று மதியம் 2 மணி அளவில் முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர்.
 

;