பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதிவியேற்றார்.
பாஜகவுடனான கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ்குமார், நேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜேடியு, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட 7 கட்சிகளின் கூட்டணி அமைத்தது. இந்நிலையில், இன்று மதியம் 2 மணி அளவில் முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர்.