india

img

அவதூறு பேசினால் என் சகோதரிகள் உங்கள் முகத்தில் குத்துவார்கள்... சுஷில்குமார் மோடியை பகிரங்கமாக எச்சரித்த லாலு மகள்....

பாட்னா:
ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவரும், பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், தனக்காகவழங்கப்பட்டிருந்த அரசு இல்லத்தை, கொரோனா வார்டு அமைப்பதற்காக வழங்கினார். இது பீகாரில் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

ஆனால், பீகார் முன்னாள் துணைமுதல்வரும் பாஜக தலைவருமான சுஷில்குமார் மோடி, தான் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘தேஜஸ்வி, சட்டவிரோதமாக வாங்கிய வீடுகளையும் கொரோனா பராமரிப்பு வார்டுகளாக மாற்றுவதற்குத் தருவாரா?’ என்று கேள்வி எழுப்பியதுடன், ‘கொரோனா ஒழிப்பில் உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், தேஜஸ்வியின் எம்.பி.பி.எஸ். படித்த இரண்டு சகோதரிகளும், ஏன் கொரோனாநோயாளிகளுக்கான சேவையில் ஈடுபடவில்லை?’ என்றும் சர்ச்சையைக் கிளப்பினார். 

சுஷில்குமார் மோடியின் இந்த அருவருப்பான தனிநபர் தாக்குதல் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. ‘தேஜஸ்விக்கு டஜன் கணக்கான சட்டவிரோத வீடுகள் இருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே.. பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சிதானே நடக்கிறது!’ என்று எழுத்தாளர் அவினாஷ் தாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில், சுஷில்குமார் மோடிக்கு லாலுவின் மூத்த மகள்ரோகிணியும் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ‘நீங்கள் என் பெயரையோ அல்லது என் சகோதரிகளின் பெயரையோ பயன்படுத்தினால், அவர்கள் உங்கள் முகத்தில் குத்துவார்கள்’ என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.‘உங்கள் காதுகளை நன்றாக திறந்து வைத்துக் கேளுங்கள்... என் சகோதரர் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்கிறார்...’ என்றும் ரோகிணி காட்டமாக கூறியுள்ளார்.

;