இஸ்ரோ-ஸ்ரீஹரிகோட்டாவில் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மனைவியும் தற்கொலை தற்கொலை செய்துகொண்டார்.
இஸ்ரோ-ஸ்ரீஹரிகோட்டாவில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி சிஐஎஸ்எஃப் வீரர் சிந்தாமணி என்பவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அடுத்ததாக ஜனவரி 16ஆம் தேதி சிஐஎஸ்எஃஃப் துணை ஆய்வாளர் விகாஸ் சிங் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரே வாரத்தில் இஸ்ரோவில் இரண்டு காவலர்கள் தற்கொலை செய்து கொண்டதையெடுத்து,விகாஸ் சிங்கின் மனைவி அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.