india

img

கேட் நுழைவுத் தேர்வுக்கு  ஆக.30 முதல் விண்ணப்பிக்கலாம்....

புதுதில்லி:
பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் கேட்நுழைவுத் தேர்வுக்கு  ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று காரக்பூர் ஐஐடி  தெரிவித்துள்ளது.ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட ஒன்றிய அரசின் தேசியஉயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேர்வதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கேட் தேர்வை காரக்பூர் ஐஐடி நடத்துகிறது.

2022-23ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட்நுழைவுத் தேர்வு பிப்ரவரி 5, 6, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 2022-ஆம் ஆண்டில் மொத்தம் 29பாடப்பிரிவுகளில் கேட் தேர்வு நடைபெற உள்ளது. பிடிஎஸ் மற்றும்எம்.பார்ம் படிப்பு படித்தவர்களும் கேட் தேர்வை எழுதலாம்.இந்நிலையில் கேட் தேர்வை எழுத ஆகஸ்ட் 30 முதல்செப்டம்பர் 24 ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஹால்டிக்கெட் ஜனவரி 3 அன்றும் தேர்வு முடிவுகள் மார்ச் 17 அன்றும் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

;