india

img

காலத்தை வென்றவர்கள் : தாதாசாகேப் பால்கே நினைவு நாள்...

தாதாசாகேப் பால்கேஎன்று அழைக்கப் படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே 1870 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் நாள் பிறந்தார்.இவர் இந்திய திரைப்படத் துறையின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

இவர் நாசிக்கில் பிறந்தார். 1885 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ. கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.
இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக் கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா.நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும். அவருடைய நினைவாக தாதாசாகேப் பால்கே விருது நிறுவப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.இவர் 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் காலமானார்.

;