india

img

தில்லி போராட்டத்தை ‘உல்லாச சுற்றுலா’ என்பதா? பாஜக தலைவர் வீட்டு முன்பு மாட்டுச் சாணத்தை கொட்டிய விவசாயிகள்...

சண்டிகர்:
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப்போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று பாஜக தலைவர்கள் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகின்றனர்.

இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட பிறகும், பாஜக தலைவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச்சேர்ந்த பாஜக தலைவரும், முன்னாள்அமைச்சருமான திக்சன் சூட், ‘விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை; அவர்கள்தில்லிக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர்’ என்று பேசியது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விவசாயிகள் மத்தியில் கடும் ஆத்திரத்தையும் உருவாக்கியது.கொதித்தெழுந்த அவர்கள், திக்சன் சூட் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஹோசியான்பூரில் உள்ள அவரது வீட்டுமுன்பு திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பியுள்ளனர். அத்துடன்,திக்சன் சூட் வாசலில் மாட்டுச்சாணத்தையும் மலைபோல கொட்டி பதிலடி கொடுத்துள்ளனர். 

;