india

img

ஊரடங்கு விதிகளை தளர்த்தும்போது கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதை உறுதிசெய்க... மாநிலங்களுக்கு ஒன்றிய  அரசு  அறிவுறுத்தல்....

புதுதில்லி:
ஊரடங்கு விதிகளை தளர்த்தும்போது கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிப் பதை உறுதி செய்ய வேண்டும் என்றுமாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை பாதிப்பு படிப்படியாக குறைந்துவருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு விதிகளை மாநில அரசுகள் படிப்படியாக தளர்த்தி வருகின்றன. இந்தசூழலில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்யவேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து மாநிலங்களுக்கு ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், கட்டுப்பாடு விதிப்பதுஅல்லது தளர்த்துவது உள்ளிட்ட எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அங்குள்ள சூழலைப் பொறுத்து உரிய ஆய்வுக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டும். கொரோனா முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் போது பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.  பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தியவுடன் சமூக இடைவெளியைகடைப்பிடிக்காமல் மக்கள் சந்தைகளில் கூடஆரம்பித்துவிட்டனர் . தற்போது கொரோனாவழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவதில் சுணக்கம் காட்டக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

;