india

img

காரில் தனியாகச் சென்றாலும் முகக்கவசம் அணிய வேண்டும்... உயர்நீதிமன்றம் உத்தரவு....

புதுதில்லி:
கொரோனா பரவல் காலத்தில் காரில் தனியாகச் சென்றாலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தில்லி உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

காரில் தனியாகச் செல்வோரும் முகக்கவசம் அணிய வேண்டும். அணியாவிட்டால் அபராதம் விதிக்கும் நடைமுறையை தில்லி அரசுசெயல்படுத்தி வருகிறது. இந்த  நடவடிக்கைக்கு எதிராக வழக்கறிஞர்கள் 4 பேர் சேர்ந்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பிரதிபா எம்.சிங் முன்னிலையில் புதனன்று நடைபெற்றது.  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வழக்கறிஞர் பர்மான் அலிமாக்ரே  கூறுகையில், “காரில் தனியாகச் செல்வோரும் முகக்கவசம் அணிய வேண்டும்என மத்திய அரசு ஏதும் உத்தரவிடவில்லை. ஆனால் அதே சமயம் சுகாதாரம் என்பது மாநில அரசுக்கு உட்பட்டது என்பதால், இதில்தில்லி அரசுதான் முடிவெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். தில்லி அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  “தில்லியில் காரில் தனியாகச் செல்வோரும் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

இது நடைமுறையில் இருக்கும்” என்று தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து நீதிபதி பிரதிபா எம்.சிங் பிறப்பித்த உத்தரவில், ‘‘காரில்தனியாகப் பயணிப்போரும் முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற தில்லி அரசின் விதிமுறைகளில் நீதிமன்றம் தலையிடாது. காரில் ஒருவர் மட்டும் தனியாகச்சென்றாலும் அவர் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். ஒருவர் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அல்லது செலுத்தாவிட்டாலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்திருப்பது என்பது, நமக்குப் பாதுகாப்பு கேடயம் போலாகும். இதன் மூலம் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். முகக்கவசம் அணிந்திருந்தால் ஒருவர் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். மாநில அரசின்நடவடிக்கைக்கு உதவியாக வழக்கறிஞர் களும், மனுதாரர்களும் இருக்க வேண்டும்.மாறாக விதிகளைக் கேள்வி கேட்கக் கூடாது. ஆதலால், இந்த மனுக்களை விசாரிக்க இயலாது” என்று தெரிவித்துள்ளார்.

;