india

img

‘ஓட் பேங்க்’, ‘நோட் பேங்க்’ அரசியல் நடத்தும் பாஜக... காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் விமர்சனம்....

புதுதில்லி:
நாட்டில், கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதாரத்தில் தவறான நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது என்றும், பாஜக ‘ஓட் பேங்க்’ (vote bank), ‘நோட் பேங்க்’ அரசியல் செய்வதாகவும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் இதுதொடர்பாக அவர் பேசியுள்ளார். 

அப்போது. “காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் செய்ததாக பாஜக குற்றம்சாட்டியது. ஆனால், இந்தாண்டு தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களுக்கு உள்கட்டமைப்பு திட்டங்களை வழங்கி, அதையேதான் பாஜக-வும் செய்துள்ளது. “வாக்குகளை  குறிவைத்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. 6 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கிறது. இனியும் அது சாக்கு போக்கு சொல்ல முடியாது. நாட்டின் வளங்களை நான்கைந்து பெரிய ஆட்களுக்கு அரசு வழங்குகிறது. இது தரகு முதலாளிகளுடனான நட்புக்கு நல்ல உதாரணம். குறு, சிறு, நடுத்தரத் தொழில் முனைவோர்கள், எஸ்.சி., எஸ்.டி.,மற்றும் சிறுபான்மையினர் தன்னிறைவு அடைய வேண்டும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக பொருளாதாரத்தில் தவறான நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது.

வேலை இழப்புகளை பற்றி எந்த கவனமும் செலுத்தவில்லை. கொரோனா-வால் 12 கோடி பேர் வேலையிழந்துள்ள சூழலில், நூறுநாள் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. ரூ. 8.55 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் டெலிகாம் துறைக்கு எந்த நிவாரணமும் இல்லை. பி.எம். கிசான் நிதி ரூ.10 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு கபில் சிபல் குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.

;