india

img

விவசாய போராட்டத்தில் வன்முறை...  கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்ட தில்லி அரசு.... 

தில்லி 
குடியரசு தினத்தன்று தலைநகர் தில்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் பாஜக, ஆர்எஸ்எஸ்-க்கு சொந்தமான நபர்கள் தில்லி காவல்துறையின் உதவியால் செங்கோட்டையில் விவசாய சங்கங்களின் கொடியை ஏற்றி போராட்டத்தை திசை திருப்ப முயன்றனர். மேலும் பிற பகுதியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் காவல்துறையின் அராஜக செயலால் வன்முறை வெடித்தது. 

வன்முறை செயல்களில் ஈடுபட்டதாக விவசாயிகளை தில்லி போலீசார் கைது செய்து பல்வேறு சிறைகளில் அடைத்தனர். அவ்வாறு சிறையில் இருக்கும் 115 பேரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (புதன்) வெளியிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட விவசாயிகளின் குடும்பம் அவர்களை காணாமல் போனதாக தேடுவார்கள் என்பதால் இந்த பட்டியலை வெளியிட்டு உள்ளதாக  கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். 

;