india

img

முதுபெரும் திரைக்கலைஞர் திலீப்குமார் காலமானார்...

மும்பை:
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் (வயது 98) உடல்நலக்குறைவால் மும்பையில் புதன்கிழமையன்று காலமானார். 

வயது மூப்பு காரணமாக நடிகர் திலீப்குமாருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம், இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார் ஜூலை 7 அன்று காலை உயிரிழந்தார். திலீப் குமாரின் மறைவு பாலிவுட் திரையுலகினரி டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித்  தலைவர்கள், திரைக்கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.நடிகர் திலீப்குமார் 1944ம் ஆண்டு ஸ்வார் படா என்ற படம் மூலம் அறிமுகமானார். தாதாசாகேப் பால்கே விருது, பத்ம பூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள் ளார். சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார்.

;