india

img

தொற்றால் பாதித்தும் தடுப்பூசியால் பாதுகாக்கப்பட்டவர்கள் 94 சதவீதம் பேர்....

புதுதில்லி:
கொரோனா தொற்றால் பாதித்தும் தடுப்பூசியால் பாதுகாக்கப்பட்டவர்கள் 94 சதவீதம் பேர் என்று நிதி ஆயோக் சுகாதாரப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று  வருகின்றன. இந்நிலையில் நிதி ஆயோக்கின் சுகாதாரப்பிரிவு தலைவர் டாக்டர் வி.கே.பால் செய்தியாளர்களிடம் கூறுகையில், பல சுகாதாரத்துறை ஊழியர்களிடம் தடுப்பூசிபோட்டு பரிசோதித்ததில் அவர்களில் 80 சதவீதம் பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிய நிலை ஏற்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஐசியு எனும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டிய நிலை 6 சதவீதம் பேருக்கு மட்டும் இருந்தது.தடுப்பூசியால் பாதுகாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 சதவீதமாக இருந்தது என்று   தெரிவித்துள்ளார்.

;