india

img

தேவையில்லாமல் சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோயை உண்டாக்கும்..... எய்ம்ஸ் மருத்துவர் எச்சரிக்கை....

புதுதில்லி:
தேவையில்லாமல் சிடி ஸ்கேன் எடுக்கவேண்டாம். அது புற்றுநோய்க்கு வழிவகுக் கும் என்று  பொதுமக்களுக்கு எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் லேசான அறிகுறி ஏதும் தென்பட்டாலே, அது கொரோனாவாக இருக்கலாம் என அச்சமடைந்து, உடனே சிடி ஸ்கேன் எடுக்க சென்றுவிடுகின்றனர். ஒருமுறை சிடி ஸ்கேன் எடுப்பது 300-400 முறைமார்பக எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். இதுஎதிர்காலத்தில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்களால் எச்சரிக்கப்படுகிறது.

இதுகுறித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில்,   கொரோனா அறிகுறிகள் தென்படுவதாக சந்தேகம் ஏற்பட்டால், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யுங்கள், அதில்  குழப்பமான முடிவு ஏற்பட்டால் மட்டுமே  சிடி ஸ்கேன்எடுங்கள். தேவையின்றி சிடி ஸ்கேன் எடுக்கவேண்டாம். ஆனால், பல தனியார் மருத்துவமனைகள், லாப நோக்கத்துடன், கொரோனா நோயாளிகளை சிடி ஸ்கேன் எடுக்க  அறிவுறுத்துகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 

சிடி ஸ்கேனுக்கும், லேசான அறிகுறி உள்ளவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மருத்துவர் ஒருமுறை சிடி ஸ்கேன் எடுப்பது 300-400 முறை மார்பக எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். இது எதிர்காலத்தில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.“இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் 30-40 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.  லேசான அறிகுறி உள்ளவர்கள் நோய்தொற்றைக் கண்டறிய சிடி ஸ்கேன் மற்றும்ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். அது தவிர்க்கப்பட வேண்டும்.

ஆரம்ப கட்டத்திலே ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்வதால், கொரோனாவுக்கு கூடுதல் வலிமை கொடுக்கும் என்பதைநாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென் றால், லேசான அறிகுறி உள்ள பல நோயாளிகள், பின்னர் தொற்று பாதிப்பு அதிகமாகி நிமோனியா ஏற்படுவதாக கூறுகின்றனர். தொற்று ஏற்பட்ட ஐந்து, ஆறு நாள்கள் வரைஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் வராது.தொற்று தீவிரமாக இருக்கும்போதுதான் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் ஆக்சிஜன் சிகிச்சை உள்ளிட்ட பல கட்ட சிகிச்சைகளுக்கு பிறகுதான் ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;