india

இந்தியாவில் ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா உயிரிழப்பு.... புதிதாக 46,148 பேருக்கு தொற்று....

புதுதில்லி:
கொரோனா தொற்றின் 2 ஆவது அலைஇந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு பல நாட்கள்4 லட்சத்தை தாண்டியது. தற்போது ஊரடங்கு, பொது முடக்கம், கட்டுப்பாடுகளால் 2 ஆவது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படை யில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில்புதிதாக 46 ஆயிரத்து 148 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,02,79,331 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில்979 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 58,578 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 5,72,994 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 32,36,63,297 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

;