india

img

கொரோனாவை பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்க முயற்சி..... மோடி அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு....

புதுதில்லி:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தும் போராட்டம் 150 நாட்களை நெருங்கியிருக்கிறது. 

இந்நிலையில், கொரோனாவைக் காரணம் காட்டி தங்களின்போராட்டத்தை ஒடுக்க, மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.‘சுவராஜ் இந்தியா’ அமைப் பின் தலைவரும் போராடும் விவசாயிகள் தலைவர்களில் ஒருவருமான யோகேந்திர யாதவ் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது:

விவசாயிகளின் எதிர்ப்பைத் தணிக்க கொரோனா வைரஸைப் பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. கடந்த ஆண்டும்இதே தந்திரத்தை அவர்கள் பயன்படுத்தினர். ஆனால் இந்தஆண்டு அதனை நாங்கள் நடக்கவிட மாட்டோம். தேர்தல் பொதுக்கூட்டங்கள் எல்லாம் வழக்கம் போல நடக்கையில், விவசாயிகள் போராட்ட விஷயத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை முன்னிறுத்துவதன் மூலம் மோடி அரசின் பாசாங்குத்தனம் அம்பலமாகிறது. தேர்தல் பேரணிகளை நடத்தி வரும், மத் திய அமைச்சர்களும், அதன் தலைவர்களும் மற்றவர்களை கேள்விகேட்பதற்கு எந்த உரிமையும் இல்லாதவர்கள். தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள விரும் பும் விவசாயிகளுக்காக போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களிலுமே நோய்த்தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆக்ஸிமீட்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, கொரோனாவைக் காட்டி எங்களின் போராட்டத் தைத் தடுத்துவிட முடியாது.இவ்வாறு யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.

ஆக்சிஜன் வாகனங்களை தடுத்தோம் என்பது பொய்!
போராடும் விவசாயிகள் ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்றிவரும் வாகனங்களை தடுப்பதாக பாஜகவினர் கூறியிருந்த நிலையில்,‘தில்லிக்கு ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் வாகனங் களை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. போராட்டத்தின் முதல் நாளில் இருந்தே ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்களுக்கு வழிவிட்டுதான் போராடுகிறோம். மனித உரிமைகளுக்குத் தான் நாங்கள் போராடுகிறோம். ஒவ்வொரு மனிதனின்உரிமைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம்’’ என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

;