india

img

ஜூன் 15-க்குள் மாநில அரசுகளுக்கு 5.86 கோடி தடுப்பூசிகள் வழங்கப்படும்.... மத்திய அரசு தகவல்....

புதுதில்லி:
ஜூன் 15 ஆம் தேதிக்குள் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு 5.86 கோடி தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு  தெரிவித்துள்ளது.மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் மற்றும் அவற்றின் கையிருப்பு நிலவரம், உற்பத்தியாளா்களிடமிருந்து மாநிலங்களும், தனியார்  மருத்துவமனைகளும் நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கான எண்ணிக்கை போன்ற தகவல்களைக் கடந்த இரண்டு வார காலமாக மத்திய சுகாதார அமைச்சகம் முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது.

தொடா்ந்து, மே மற்றும் ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வார காலத்துக்கு மத்திய அரசிடமிருந்து (இலவசமாக) மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி தவணைகள் (கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின்), மே மற்றும் ஜூன் மாதங்களில்மாநிலங்களும் தனியார்  மருத்துவமனைகளும் நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கான எண்ணிக்கை போன்ற தகவல்களை மத்திய அமைச்சகம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தெரிவித்துள்ளது.மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, மே 1 முதல் ஜூன் 15 வரை மொத்தம் 5 கோடியே 86 லட்சத்து 29 ஆயிரம் டோஸ் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்.கூடுதலாக, தடுப்பூசி உற்பத்தியாளா்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஜூன் மாத இறுதி வரை 4 கோடியே 87 லட்சத்து 55 ஆயிரம் டோஸ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நேரடிக் கொள்முதலுக்கு வழங்கப்படும்.கொரோனா தடுப்பூசித் திட்டத்தை நோ்மையாகவும் முறையாகவும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.ஜூன் 15-ஆம் தேதி வரை செலுத்தப்படவுள்ள தடுப்பூசிகள் பற்றிய திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

;