ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.
*****************
ராஜஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
*****************
ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் பகுதியில் மின்கம்பத்தில் மோதி பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
*****************
போடி அருகே சடையால்பட்டி கிராமத்தில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
*****************
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது ஒன்றே தீர்வாக இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
*****************
சென்னையிலிருந்து குஜராத்தி லுள்ள வல்லபபாய் படேல் சிலைப் பகுதிக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடங்கியது.
*****************
விராலிமலை அருகே அனுமதி யின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், மாடு முட்டியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
*****************
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றில்இருந்து 17,170 போ் குணமடைந்தனா்.
*****************
உலகம் முழுவதும் கொரோனாநோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்ந்துள்ளது.