india

img

கோவிட்- 19 தடுப்பூசி பாதுகாப்பானது... சிஎஸ்ஐஆர் இயக்குநர் ஜெனரல் நம்பிக்கை....

புதுதில்லி:
கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பானது; மக்கள் அதைஎடுத்துக்கொள்ள தயங்கக்கூடாது என்று இந்திய அறிவியல் -தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) இயக்குநர் ஜெனரல் டாக்டர் சேகர் மண்டே தெரிவித்தார்.கொரோனா தடுப்பூசி போடப்படுவதற்கான ஒத்திகை குறித்து இந்திய அறிவியல் - தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) இயக்குநர் ஜெனரல் டாக்டர் சேகர் மண்டே கூறியதாவது:

தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்று அனைவருக்கும் நான் உறுதியளிக்க விரும்புகிறேன். இது அனைத்து பாதுகாப்பு சோதனைகளையும் வெற்றிகரமாகக் கடந்துள்ளது. இதில் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் இல்லை. எனவேதடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மக்கள் தயங்கக்கூடாது.நாடு முழுவதும் நான்குமாநிலங்களில் வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் சொன்னால், இது அரசாங்கத்தின் மிகவும் அதிகாரபூர்வமான குரலாக இருக்கும். இது ஒருநல்ல வளர்ச்சியாகும். ஒப்புதல் வழங்கப்பட்டவுடன் உடனடியாக நாட்டிற்கு தடுப்பூசிபோடுவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

இறுதியில் தடுப்பூசிக்கான ஒப்புதல் பெற்ற பிறகு, அரசாங்கத்தின் முன்னால் மிகப்பெரிய பணி காத்திருக்கிறது. அது நமது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதாகும். இதை ஒரு மகத்தான பணி என்று அழைப்பது ஒரு குறைவான கருத்தேயாகும். ஏனெனில் இது பொதுத் தேர்தல்களை நடத்துவதைப் போன்றது.இதில் இன்னொரு முக்கியமான பணி உள்ளது. தடுப்பூசியை மக்களுக்குவழங்கிய பிறகு எதிர்மறையான எதிர்விளைவுகளைச் சரிபார்க்கவும் கண்காணிக்கவும் முக்கியத்துவம் தரவேண்டும். அதற்கான தயார்நிலைக்காக குறைந்தபட்சம் சிறிது நேரமாவது எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

                                       *****************

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு  மத்திய அரசு அனுமதி
 
அவசர கால பயன்பாட்டிற்காக கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு வெள்ளியன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இந்தியாவில் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான 4 தடுப்பூசிகள்தாயாக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார். ஜனவரி 15 முதல் கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசிபயன்பாட்டிற்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

;