india

img

உ.பி.யில் பாஜக-வின் தோல்வி இப்போதே உறுதியாகிவிட்டது.. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கணிப்பு...

லக்னோ:
ஆதித்யநாத் ஆட்சி மீது, உத்தரப்பிரதேச மாநில மக்கள், கடும் கோபத்தில்இருப்பதால், அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைவது உறுதி என்று முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் கூறியுள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அகிலேஷ் மேலும்கூறியிருப்பதாவது:

“தற்போதைய பாஜக ஆட்சிமீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதனால்  மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.  அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரபிரதேச தேர்தலில் மக்களின் கோபம் வெளிப்படும். பாஜக படுதோல்வி அடையும்.கடந்த தேர்தல்களின்போது, பெரிய கட்சிகளுடன் (மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் உடன்)கூட்டணி அமைத்து போட்டியிட்டது சரியாகப்படவில்லை. அது நன்றாக அமையவில்லை. ஆதலால், இனிவரும் தேர்தல்களில்,  பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை. 

எங்கள் கட்சிக் கொள்கைகளுடன் ஒத்துப்போகும்   கருத்துடைய சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைஎதிர்க்கொள்ள திட்டமிட்டு வருகிறேன். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மாநிலத்தில் உள்ள 403 இடங்களில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சிஅமைக்கும்.ஒன்றிய பாஜக அரசும், உ.பி. மாநிலபாஜக அரசும் கொரோனா தொற்றின் உண்மையான எண்ணிக்கையை மறைத்ததால்தான் மக்கள் கும்ப மேளாவுக்குச் சென்றார்கள். அது உ.பி.யில் தொற்று பரவலை அதிகரித்தது, கிராமப்புறங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் கடுமையானது. கொரோனா மரணங்களை அரசு மறைக்கிறது. இதனால், ஆதித்யநாத் அரசின்மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களின் கோபம், வருகின்ற உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக-வை தோல்வியடையச்செய்யும்.இவ்வாறு அகிலேஷ் கூறியுள்ளார்.

;