india

img

பாஜகவால் என்னைத் தொட முடியாது.... ஆனால் என்னை சுட முடியும்.... தில்லியில் ராகுல்காந்தி பரபரப்பு பேட்டி....

புதுதில்லி:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில், 55 நாட்களாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில், காங்கிரஸ்முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் குறித்த சிறு புத்தகத்தை வெளியிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, நாட்டில் இன்று சோகம் நிலவி வருகிறது. அரசாங்கம் பிரச்சினையை புறக்கணிக்க விரும்புகிறது. நாட்டை தவறாக வழிநடத்த விரும்புகிறது. சோகத்தின் ஒரு பகுதி மட்டுமே என்பதால் நான் விவசாயிகளைப் பற்றி மட்டும் பேசப்போவதில்லை. இந்த நூல் இளைஞர்களுக்கு முக்கியம். இது நிகழ்காலத்தைப் பற்றியது அல்ல, உங்கள் எதிர்காலத்தைப் பற்றியது என்றார். மேலும் “நான் பயப்படவில்லை, அவர்களால் (பாஜகவால்) என்னைத் தொட முடியாது. அவர்கள் என்னை சுட முடியும்” என்றார். 

;