india

img

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு, 12 கோடி தடுப்பூசி தேவை.. ஒன்றிய அமைச்சர்களிடம் தமிழக அமைச்சர் நேரில் வலியுறுத்தல்...

புதுதில்லி:
மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் 12 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்றும் கோரி ஜூலை 15 அன்று தில்லியில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் மற்றும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  மனுக்களை அளித்தார். 

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமையன்று தில்லிக்குச் சென்று நீட் விலக்கு, கூடுதல் கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவை குறித்து  ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.அமைச்சர்களிடம் கோரிக்கை மனுக்களையும் வழங்கினார்.பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு வழங்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தோம். கிராமப்புற மாணவர்களின் பாதிப்பு, 13 மாணவர்கள் உயிரிழப்பு, ஏ.கே. ராஜன் குழுஅறிக்கை ஆகியவற்றை எடுத்துக் கூறி வலியுறுத்தினோம்.

பின்னர் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்தபோது, 12 கோடி தடுப்பூசி தமிழகத்துக்கு தேவை. தற்போது வழங்குவது போதுமானதாக இல்லைஎன்பதை தெரிவித்து கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். தமிழ்நாடு சிறப்பாக தடுப்பூசி செலுத்தி வருவதாக கூறிய ஒன்றியஅமைச்சர் நிச்சயம் கூடுதல் தடுப்பூசி வழங்குவாதாகத் தெரிவித்தார்.மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்தை விரைந்து தொடங்கவேண்டும். கோவையிலும் புதிய எய்ம்ஸ் தொடங்க வேண்டும். புதிய 11 மருத்துவ கல்லூரிகளுக்கு இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடத்த வலியுறுத்தினோம். மருத்துவக்கல்வியில் இட ஒதுக்கீடு முறையாக வழங்க வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.இதைத் தொடர்ந்து செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிப்பை தொடங்க வலியுறுத்தினோம். இரண்டாம் அலை தேவை மற்றும் மூன்றாம் அலையை தடுக்க தேசிய சுகாதார திட்டத்தின் மூலம் 800 கோடி ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர்தெரிவித்தார். இந்த ஆண்டு விலக்கு கிடைக்காவிட்டாலும்அடுத்தஆண்டு நிச்சயம் நீட்டிலிருந்து விலக்கு பெற தீவிரநடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.நீட் தேர்வு விலக்கு தொடர்பாக கல்வி அமைச்சரிடம் வலியுறுத்திய போது எந்த நிலையிலும் நீட் தேர்வுரத்து செய்யப்படாது என ஒன்றிய அமைச்சர் தெரிவிக்கவில்லை. அது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது என்று தெரிவித்தார்.

படம் : நன்றி.. சன் நியூஸ் 

;