india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

சத்தீஸ்கரில் குப்பை கொண்டு செல்லும் வேனில் இறந்த கொரோனா நோயாளிகளின் உடல் கொண்டு செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

                                   **************

திருநெல்வேலி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு பாதுகாப்புக் காக வந்துள்ள சிஆர்பிஎப் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

                                   **************

கொரோனா தடுப்பூசி போடுவதைத் தீவிரப்படுத்தும் வகையில், தடுப்பூசி திருவிழாவை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. இதையடுத்து தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டுள்ளன.

                                   **************

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.91 அடியாக குறைந்துஉள்ளது.

                                   **************

தமிழகத்தில் 15 நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது. பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்து லிட்டர் 85.43 ரூபாய்க்கும், டீசல் விலை 13 காசுகள் குறைந்து 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

                                   **************

ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து விற்பனை செய்யப்படும் தங்கஆபரணங்களுக்கு ஹால்மார்க்முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ள தாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

                                   **************

தமிழகம் முழுவதும் கடற்கரையோர மாவட்டங்களில் மீன்பிடித் தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தடைக் கால நிவாரணத்தை உயர்த்தி வழங்கவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                                   **************

ஐ.எஸ்., அல்கொய்தா, இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் உள்பட 11 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

                                   **************

கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (865 புள்ளி) விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார்.

                                   **************

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் தமிழகத்தில் 6.97 லட்சம் பேரை போலியாக சேர்த்து ரூ.321 கோடி முறைகேடு செய்துள் ளது தெரியவந்துள்ளது.

                                   **************

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலையை 15 காசுகள் உயர்த்தி ஒரு முட்டை ரூ.4.75க்கு விற்பனை செய்யப்படுகிறது.

                                   **************

திருச்சி முக்கொம்பில் புதிய மேலணை கட்டும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பணிகள் நிறைவடைந்து ஜூலையில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித் துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

                                   **************

திருப்பத்தூரை அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி அருகே புதிய கற்காலப்பாறை ஓவியங்கள் மற்றும் மனிதர்கள் வாழ்ந்த வாழ்விடங்களை ஆய்வுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

                                   **************

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

                                   **************

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த திமுகபொதுச் செயலாளா் துரைமுருகன் வீடு திரும்பினார்.

;