india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஜூலை 12 அன்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் அசாம்,திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து முதல்வர்கள் பங்கேற்றனர்.

                                   **************

சூரியனில் வீசும் புயலால் பூமியில் தொலைத் தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

                                   **************

எல்ஐசியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐடிபிஐ வங்கியைத்தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளில் ஆலோசனைகளை வழங்குவதற்காக விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை ஜூலை 22-ஆம் தேதி வரை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.

                                   **************

பாம்பன் ரயில் பாலத்தில் ஜூலை 15 முதல் செப்டம்பர் 19ஆம் தேதி வரை தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

                                   **************

சாத்தான்குளம் தந்தை, மகன்கொலை வழக்கை கேரளாவுக்கு மாற்ற தேவையில்லை  என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வழக்கை கேரளாவுக்கு மாற்றக்கோரும் எஸ்.ஐ ரகுகணேஷ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்என்றும் வழக்கில் சிறையில் உள்ளஎஸ்.ஐ ரகுகணேஷ் தான் தாக்கப்பட்டதாக கூறுவது தவறு என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

;