india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

ரயில் நிலையங்களில் முகக் கவசம்அணியாதவர்களிடம் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

                                      ****************

தில்லியில் வார இறுதி நாள்களில்பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையில்்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருவதாக காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

                                      ****************

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனியன்று 97.71 அடியாக குறைந்துள்ளது. 

                                      ****************

இந்தியாவில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர்.

                                      ****************

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் திரவ ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுமாறு மகாராஷ்டிர அரசு வைத்த கோரிக்கையை இந்திய ரயில்வே ஏற்றுக் கொண்டுள்ளது.

                                      ****************

நாடு முழுவதும் இதுவரை 12 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

;