india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

வருங்கால வைப்புநிதி கணக்கில் ஆதாரை இணைக்க செப்டம்பர் 1 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

                                             ****************

தில்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களையோ, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களையோ இயக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தில்லி அரசு தெரிவித்துள்ளது.

                                             ****************

தமிழகத்தில் மின் கணக்கிடும் பணிகள் இனி வழக்கம்போல் நடைபெறும் என்று மின்வாரியம் தெரி வித்துள்ளது.

                                             ****************

பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்கக்கூடிய பிழை இருப்பதை கண்டறிந்து சொன்னதற்காக இந்தியாவைச் சேர்ந்த பொறியியல் மாணவர் மயூர் என்பவர் ரூ.22 லட்சம் பரிசு வென்றுள்ளார்.

                                             ****************

தமிழகத்தில் 5 மலைக் கோயில்களுக்கு ரோப் கார் திட்டம் அமைப்பது குறித்து கள ஆய்வு செய்து விரைவில்பணிகள் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

                                             ****************

நடப்பு நிதியாண்டில் இதுவரையில் நிகர நேரடி வரி வசூல் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.1.85 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

;