india

img

ஊரக வேலை திட்டம்.... நான்கு ஆண்டுகளில் ரூ.935 கோடி முறைகேடு....

புதுதில்லி:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அமலாக்கத்தில் ரூ.935 கோடிமுறைகேடு நடந்துள்ளதாக ஒன்றிய ஊரகமேம்பாட்டு அமைச்சகம் நடத்திய தணிக்கையில் தெரியவந்துள்ளது. இதில் ரூ.12.5 கோடிஅளவிலான தொகை மட்டுமே வசூலாகி யுள்ளது. இது மொத்த தொகையில் 1.34% ஆகும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2.65 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில், கடந்த 4 ஆண்டுகால (2017-18 முதல்) ஊரக வேலைதிட்ட அமலாக்கம் பற்றி தணிக்கை நடத்தப்பட்டது. 2017-18-ம் நிதிஆண்டில் ஒன்றிய அரசு இந்த திட்டத்துக்கு ரூ.55,659 கோடிநிதி ஒதுக்கியுள்ளது. இது ஒவ்வொருஆண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2020-21ம் நிதி ஆண்டில் ரூ.1,10,355 கோடியாக உயர்ந்து ள்ளது என தணிக்கை அறிக்கை கூறுகிறது.இந்த நிலையில் ரூ.935 கோடி நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது தணிக்கையில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. லஞ்சம் மற்றும் உயிருடன் இல்லாதவர் களுக்கு பணம் அளித்ததாக கணக்கு காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதுதவிர அதிக விலையில் பொருட்களை கொள் முதல் செய்ததும் தெரியவந்துள்ளது.தமிழகத்தில் மிக அதிக அளவாக ரூ.245 கோடி முறைகேடு நடந்துள்ளது. இதில்0.85% தொகை அதாவது ரூ.2.07 கோடி மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தணிக்கையில் தெரியவந்துள்ளது.

;