india

img

கையிருப்பு 1.58 கோடி டோஸ்கள்... மாநிலங்களுக்கு கூடுதலாக 1. 16 கோடி கொரோனா டோஸ்கள் வழங்கப்படும்.... மத்திய அரசு தகவல்....

புதுதில்லி:
மாநிலங்களிடம் ஒரு கோடியே58 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளதாகவும், மேலும் கூடுதலாக ஒரு கோடியே 16 லட்சத்து 84 ஆயிரம் டோஸ்கள் அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.கொரோனா கட்டுப்பாடு மற்றும்மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை  அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசுகையில், 2021 ஏப்ரல் 12-ஆம் தேதி உலகளவில் தினசரி கோவிட் புதிய பாதிப்புகளில் மிக அதிக எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டது. அன்றைய தினம் உலகளவில் ஏற்பட்ட பாதிப்புகளில் இந்தியாவில் 22.8 சதவீதம் பதிவானது.கடந்த 2020 ஜூன் மாதம் பதிவான 5.5 சதவீதம் என்ற எண்ணிக்கையை விட 1.3 மடங்கு அதிகமாக, 7.6 சதவீத புதிய கோவிட் பாதிப்புகள் இந்தியாவில் தற்போது பதிவாகி வருகின்றன. இதனால் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் அன்றாட எண்ணிக்கை, அபாயகரமான எண்ணிக்கையில் உயர்ந்து, தற்போது 16 லட்சத்து 79 ஆயிரமாக ஆக பதிவாகியுள்ளது.

உயிரிழப்புகளின் வீதமும் 10.2 சதவீதம் என்ற வகையில் அதிகரித்துள்ளது. தினசரி புதிய பாதிப்புகள் மற்றும் தினமும் புதிதாககுணமடைவோர் ஆகியோருக் கான இடைவெளி அதிகமாகி வருவது, குணமடைவோரின் வீதத்தை விட தொற்று வேகமாகப் பரவுவதை காட்டுகிறது. மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கிய 14 கோடியே 15 லட்சம் டோஸ்களில் சுமார் 12 கோடியே 57 லட்சத்து 18 ஆயிரம் டோஸ்கள் (வீணானதடுப்பூசிகள் உட்பட) விநியோகிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களிடம் ஒரு கோடியே 58 லட்சம் டோஸ்கள் கையிருப்பு உள்ளபோதும், மேலும் கூடுதலாக ஒரு கோடியே 16 லட்சத்து 84 ஆயிரம் டோஸ்கள் அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளன என்று தெரி வித்தார்.
 

;