india

அரசுப் பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு.... மாற்றுத்திறனாளிக்கு உரிமை உள்ளது... உச்சநீதிமன்றம் தீர்ப்பு...

புதுதில்லி:
கேரளாவில் அரசுப் பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கோருவதற்கு மாற்றுத்திறனாளிக்கு உரிமை உள்ளது என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், கேரள அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் 1950 ஆம் ஆண்டுஇட ஒதுக்கீடு என்பது அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதலாவதாக 45சத வீதம் வழங்கப்பட்டது. இதையடுத்து 1957ஆம் ஆண்டில் இது 50 சதவீதமாக உயர்த்தப் பட்டது. இதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 40 சதவீதம் இட ஒதுக்கீடு ஒரே பிரிவாக வழங்கப்பட்டது. இந்நிலையில், அரசு பணியில் பதவிஉயர்வு வழங்கப்படும் போது மாற்றுத்திற னாளிகளுக்கும் போதிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். மேலும் அதற்கு உரிமை உள்ளது என்றும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டுக்கான உரிமை உள்ளது என உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தர விற்கு எதிராக, கேரள அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், கேரள மாநிலத்தில் உள்ளஅரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்இட ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிமை உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் கேரள உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. இதனை அடுத்த மூன்று மாதங்களில் மாநிலஅரசு கண்டிப்பாக அமலுக்கு கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், கேரள அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

;