india

img

மாநிலங்களுக்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு....

புதுதில்லி:
மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கூடுதலாக ரெம்டெசிவிர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் டி வி சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள தாவது:மே 23 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிவரையிலான காலத்திற்கு, அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 22.17 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்து கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மே 23 ஆம் தேதி வரையில், 76.70லட்சம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்து அனைத்து மாநிலங்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.  இதுவரையில் 98.87 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்து நாடெங்கிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;