india

img

தொடங்கியது பிரதமர் மோடியின் வெளிநாடு பயணம்.... வங்கதேச சுதந்திர தின விழாவில் பங்கேற்கிறார் ....

புதுதில்லி:
வங்கதேசத்தின் 50வது சுதந்திர தின விழாவில் பங்கேற்கபிரதமர் மோடி மார்ச் 26 ஆம் தேதி டாக்கா செல்கிறார். கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதநிலை இருந்தது.

இந்நிலையில் 15 மாதங்களுக்கு பிறகு மோடி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.பாகிஸ்தானிலிருந்து  1971 ஆம் ஆண்டு பிரிந்து வங்கதேசம்தனிநாடாக உருவானது. வங்கதேசம் உருவானதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. பாகிஸ்தானுடன் போரிட்டு தனிநாடு உருவாக இந்திய ராணுவம் முக்கிய பங்காற்றியது.இதன் 50வது ஆண்டு விழா வங்கதேசம் தலைநகர் டாக்காவில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதையொட்டி பிரதமர் மோடி மார்ச் 26-ல் வங்க தேசம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

;