india

img

ஜன.5 முதல் குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகத்தை பார்வையிடலாம்....

புதுதில்லி:
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக மூடப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியக வளாகம், மக்கள் பார்வையிடுவதற்காக  ஜனவரி 5 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. திங்கள்கிழமை மற்றும் அரசுவிடுமுறை தினங்கள் தவிர அனைத்து நாட்களிலும் இது திறந்திருக்கும்.

https://presidentofindia.nic.in அல்லது https://rashtrapatisachivalaya.gov.in/அல்லது https://rbmuseum.gov.in/ ஆகியதளங்களில் பார்வையாளர்கள் தங்களது பார்வை நேரத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். முன்பிருந்ததைப் போலவே ஒருவருக்கு ரூ.50  பதிவுக் கட்டணமாக வசூலிக்கப்படும். அருங்காட்சியக வளாகத்திலேயே பதிவு செய்து கொள்ளும், முன்பிருந்த வசதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணிவரை, காலை 11.30 மணியில் இருந்து பிற்பகல்1 மணி வரை, பிற்பகல் 1.30 மணியில் இருந்து3 மணி வரை மற்றும் பிற்பகல் 3.30 மணியில்இருந்து மாலை 5 மணி வரை என நான்கு பார்வை நேரங்களில், அதிகபட்சம் தலா 25 நபர்கள் அனுமதிக்கப்படுவர். தனி நபர் இடைவெளியைக் கடைபிடிப்பதோடு, பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்து வருவதுடன், ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்திருக்கவும் வேண்டும்.கொரோனா பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருக்கக்கூடிய நபர்கள் பார்வையிட வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

;