india

பவுடர் வடிவ 2-டிஜி கொரோனா மருந்து... வர்த்தக ரீதியில் விற்பனை....

புதுதில்லி:
டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2-டிஜிகொரோனா மருந்தை தயாரித்துள் ளது.2-டிஜி மருந்து உடலில் சென்றுவைரஸால் பாதிக்கப்பட்ட செல் களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல், வைரஸ் வளர்ச்சியை தடுக்கிறது.

கடந்த ஆண்டு மே மாதம் ஒன்றியமருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு, 2-டிஜி மருந்தை 2 ஆவது கட்ட கிளினிக்கல் பரிசோதனை நடத்த அனு மதியளித்தது. இதைத் தொடர்ந்து டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம், டிஆர்டிஓ ஆகியவை இணைந்து கிளினிக்கல் பரிசோதனையை கொரோனா நோயாளிகளிடம்நடத்தினர்.2 ஆவது கட்ட கிளினிக்கல் பரிசோதனை இந்தியாவில் 6 மருத்துவமனைகளில் நடைபெற்ற பரிசோதனையில் வெற்றி அடைந்தது. கடந்தஆண்டு நவம்பர் மாதம் 3-வது கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. 3 ஆவது கட்ட கிளினிக்கல் பரிசோதனையில், 220 கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி பரிசோதிக்கப்பட்டதில், ஆக்சிஜன் உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு நல்ல பலன் அளித்துள்ளது.

இதையடுத்து, ஜூன் 1 ஆம் தேதி டிஆர்டிஓ தயாரித்த 2-டிஜி மருந்தை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளது. தண்ணீர் கலந்து  குடிக்கும் பவுடர் வடிவ மருந்து  முதல் கட்டமாக 10 ஆயிரம் டோஸ்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப் பட்டது.இதனைத் தொடர்ந்து 2-டிஜி மருந்து வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வருவதாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இந்த மருந்தை கொரோனா நோயாளிகள் வாங்கி பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் மருந்தை மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யவும் டாக்டர் ரெட்டிஸ்நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

;