india

img

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒருநாள் முன்பு ‘பாரத் நெட்’ டெண்டருக்கு அனுமதி..... மோடி அரசின் அடுத்த ‘பலி’....

புதுதில்லி:
பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகை,கார்ப்பரேட்களுக்கு ஆதரவான டெண்டர், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க தீவிரமாக முயற்சிகள் என பல்வேறு செயல்களை முனைப்புடன் செய்து வருகிறது.

குறிப்பாக சேலம் உருக்காலை, விமான நிலையங்கள், ரயில் பெட்டித்தொழிற்சாலைகள், பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் ரயில்வே துறை என அனைத்து பொதுத்துறைகளை யும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு,மக்களுக்குச் சேவை செய்யப்போவ தாக பாஜக அரசு தம்பட்டம் அடித்துவருகிறது.இந்நிலையில், கிராமங்களில் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் ‘பாரத் நெட் திட்டத்தை’ செயல்படுத்துவதற்கு ரூ.2000 கோடி அளவில் டெண்டர் விடப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள 12,524கிராமங்களுக்கு அதிவேக இன்டெர்நெட் இணைப்புகளைக் கொண்டு சேர்க்கும் வண்ணம் உருக்கப்பட்ட திட்டமே ‘பாரத் நெட் திட்டம்’. இத்திட்டத்திற்கான பணிகளை தமிழ்நாடு ஃபைபர்நெட் கழகம் (TANFINET) மேற்கொண்டு வந்தது. 

இந்த திட்டத்தை செயல்படுத்து வதற்கு மத்திய அரசு பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களுக்கு வழங்காமல், டெண்டர் மூலம் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு முடிவு செய்திருந்தது.மத்திய அரசின் இத்தகைய முடிவுற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்தெரிவித்தபோதும், அதனைக் காதில் வாங்கிக் கொள்ளாத மோடி தற்போது பாரத் நெட் திட்டத்தை டெண்டருக்கு விட்டுள்ளது.முன்னதாக, டெண்டர் விடுவதில் முறைகேடுகள் இருப்பதாகவும், குறிப்பிட்ட சில நிறுவனங் களில் ஒப்பந்தத்தைப் பெற ஏதுவாகநிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக வும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. அதுமட்டுமல்லாது, தமிழக அரசு இந்தத் திட்டம் தொடர்பான விளக்கங்களை மத்திய வர்த்தகஅமைச்சகம் மற்றும் நீதிமன்றங் களுக்குத் தொடர்ந்து அளித்து வந்தது.அதனைத் தொடர்ந்து மத்திய வர்த்தக அமைச்சகம், டெண்டர் விதிகளை அரசு முறையாகப் பின்பற்றவில்லை என்று கூறி பாரத் நெட் திட்டத்தின் டெண்டரை ரத்துசெய்து அறிவித்தது. ஆனால், மீண்டும் செயல்படுத்தி லாபம் சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு மற்றும்உயர்நீதிமன்றத்தின் தலையீட்டை அடுத்து சில நிபந்தனைகளை மாற்றியது TANFINET நிறுவனம்.

இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முந்தைய நாளான பிப்ரவரி 25 ஆம் தேதி பாரத் நெட் டெண்டருக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. தேர்தல் நடத்தைவிதி அமலுக்கு வரும் முந்தைய நாள் பாரத் நெட் டெண்டருக்கு அனுமதி தரப்பட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

;