india

img

கொரோனா தடுப்பூசிக்கு பதில் வாய்வழி மருந்து....   நம்பிக்கையூட்டும் புதிய தகவல்.....

புதுதில்லி:
கொரோனா தொற்றினை தடுக்க ஊசிக்குப் பதிலாக, வாய்வழியாக உட்கொள்ளும் மருந்துகள் விரைவில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.உலகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. இந்தியாவில் நோய் பரவல் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் பீதி அடைந்த நிலையில்,தற்போது அதன் உற்பத்தி மற்றும் விநியோகப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கொரோனாவில் இருந்து முற்றிலும் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்று இருந்த நிலையில்,தற்போது ஒரு மாற்றாக வாய்வழி மருந்து கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையூட்டும் தகவல்கள் வந்துள்ளன.இதுதொடர்பாக பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசர் நிறுவனத்தின் இயக்குநர் ஆல்பர்ட் போர்லா அமெரிக்கபத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரி வித்துள்ளதாவது: மருந்து கட்டுப்பாட்டாளரின் அனுமதி உள்ளிட்ட எல்லா விஷயங்களும் சரியாக நடந்தால் இந்த ஆண்டின் இறுதிக்குள்இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.வாய் வழியாக உட்கொள்ளும் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தால். மருந்தை பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும்கூறப்படுகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில், நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ‘‘ரெம்டெசிவிர்’’ என்கிற மருந்தும் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;