india

img

மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரும் போராட்டம்.... மே 26 நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு..... அனைத்து விவசாய முன்னணி அறைகூவல்....

புதுதில்லி:
விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை சீரழிக்கும் வகையில் மத்தியமோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி 6 மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடச்சியாக மே 26 அன்று நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிக்குமாறும், அன்றையதினம் மக்கள் தங்கள் வீடுகளிலும், கடைகளிலும் கருப்புக் கொடியை ஏற்ற வேண்டும்என்றும் அனைத்து விவசாய முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) அறைகூவல் விடுத்துள்ளது.

நாட்டில் இயங்கும் 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைஉள்ளடக்கிய  அனைத்து விவசாயமுன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) சார்பில் சனிக்கிழமை யன்று இணைய வழி பத்திரிகை யாளர் மாநாடு நடத்தப்பட்டது. இதில் உரைநிகழ்த்திய விவசாயிகள் சங்கத் தலைவர் பல்பீர் சிங்ராஜேவால், மத்திய அரசின் விவசாயிகள் விரோத மூன்று வேளாண்சட்டங்களுக்கும் எதிராக தில்லிஎல்லைகளில் கிளர்ச்சிப் போராட்டம் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடைவதையொட்டி, மே 26 அன்று ‘கருப்பு தினம்’ அனுசரித்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  அன்றையதினம் மக்கள் தங்கள் வீடுகளிலும், வாகனங்களிலும், கடைகளிலும் மூன்றுவேளாண் சட்டங்களுக்கும் எதிராகத் தங்கள் எதிர்ப்பைக் காட்டும்வண்ணம் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

“மே 26, நாங்கள் கிளர்ச்சிப் போராட்டத்தைத் தொடங்கி ஆறு மாதங்களாகின்றன. மேலும் அந்ததினமானது பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று ஏழாண்டுகளாகி விட்டதையும் குறிக்கிறது. இந்த தினத்தை நாங்கள் கருப்பு தினமாக அனுசரிக்க இருக்கிறோம். அன்றைய தினம் பிரதமர் மோடிக்கு எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதத்தில் அவருடைய கொடும்பாவிகளையும் எரிக்க இருக்கி றோம்” என்றும் ராஜேவால் கூறினார். (ந.நி.)

;