india

img

தீக்கதிர் செய்தி துளிகள்... (தேசிய மண்டலம்)

சத்தீஸ்கரில் கடந்த சனிக்கிழமையன்று ராணுவத்துக்கும் நக்சல்களுக்கும் இடையே பாஸ்டர் சரகத்தில்நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் போது கடத்தப்பட்ட ராணுவ வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                        **************

டோக்கியோ ஒலிம்பிக்சில் படகு ஓட்டும் போட்டியில் பங்கேற்க சென்னையைச் சேர்ந்த வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார். கடைசி சுற்றுக்கு முன்பேமுதலிடத்தை அவர் உறுதிசெய்துள்ளார்.

                        **************

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஏப்ரல் 9 அன்று ஆலோசனை மேற்கொள்ள வுள்ளார்.

                        **************

தமிழகத்தில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடுத்த 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

                        **************

சேலத்தில் கோவில் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில், கோவில் சொத்துக்களை பாதுகாக்க  இந்து சமய அறநிலைய துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

;