india

img

தில்லி வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்...

புதுதில்லி:
மகாராஷ்டிரா, கேரளா உள்பட ஐந்து மாநிலங்களில் இருந்து தில்லிக்கு வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலை கணக்கில் கொண்டு, ஐந்து மாநிலங்களில் இருந்து தில்லி வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட உள்ளது. இந்த தகவலை தில்லியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த அதிகாரி கூறுகையில்,  மகாராஷ்டிரா ,கேரளம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களிலிருந்து  சனிக்கிழமை முதல் தில்லி வரும் பயணிகள், கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஐந்து மாநிலங்களிலும் நாள்தோறும் தொற்று அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மார்ச் 15 ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

;