india

img

2 தமிழக ஆசிரியர்கள் உள்பட  44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது... குடியரசுத் தலைவர் வழங்கினார்...

குடியரசுத் தலைவர் வழங்கினார்

புதுதில்லி,செப்.5- தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் உட்பட 44 ஆசிரியர்களுக்கு தேசிய ‘நல்லாசிரியர்’ விருதை  குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த்வழங்கினார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்   டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5- ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை கவுரவிக்கும் வகையில் தேசிய நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா  காணொலிக்காட்சி  மூலம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின்  திருச்சி பிராட்டி யூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷாதேவி, ஈரோடு மொடக்குறிச்சி அரசு மகளிர் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா உட்பட  44 பேருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்,  நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

;