india

img

சில வரிச் செய்திகள்....

தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமையும் வரை தமிழக காவல்துறையினருக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

                                             ******************

தென் மாவட்டங்களில் மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

                                             ******************

தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதனன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

                                             ******************

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் துணை உதவியாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஜூ வர்க்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

                                             ******************

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 24 மணி நேரமும் செயல்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

                                             ******************

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதனன்று 102.82 அடியாக குறைந்தது.  அணையின் நீர் இருப்பு 68.54 டிஎம்சியாக உள்ளது.

                                             ******************

அரசுக்கு எதிரான கருத்தை தேசத்துரோகமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அரசுக்கு எதிராக பேசிய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீது தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

                                             ******************

வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்த்தவர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

                                             ******************

மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் ஆதரவற்றோருக்கான சிறப்பு அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் அமைக்கப்படுகிறது.

                                             ******************

உதகை அருகே அவலாஞ்சி மின்வாரிய குடியிருப்பு அருகே செவ்வாயன்று 2 வெள்ளை புலிகளை  பார்த்ததாக சாலைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  மாவட்ட வன அலுவலர் வெள்ளை புலிகளின் நடமாட்டத்தை கண்டறிய உத்தரவிட்டுள்ளார்.

;