india

img

இந்தியா பாகிஸ்தானின்  உண்மையான எதிரி வறுமை - மலாலா

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உண்மையான எதிரி 'வறுமை' என்று மலாலா தெரிவித்துள்ளார். 

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் கல்வி உரிமை ஆர்வலருமான மலாலா யூசுப்சாய் மெய்நிகர் முறையில் நடைபெற்ற  ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் (ஜே.எல்.எஃப்) கலந்து கொண்டார். அப்போத அவர் கூறியதாவது:-

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உண்மையான எதிரி 'வறுமை, பாகுபாடு மற்றும் சமத்துவமின்மை, இரு நாடுகளும்  ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் இருவரும் கைகோர்த்து அதற்கு எதிராக போராட வேண்டும். எல்லைகள் மற்றும் பிளவுகளைக் கொண்ட பழைய தத்துவம் இனி சரிப்படாது.  இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள மக்கள் நிம்மதியாக வாழ விரும்புகிறார்கள்.  இரு நாடுகளும் "நல்ல நண்பர்களாக" மாறுவது  தான் எனது கனவு."இந்தியாவும் பாகிஸ்தானும் உண்மையான நல்ல நண்பர்களாக மாறுவதும், நாம்ஒருவருக்கொருவர் நாடுகளுக்குச் செல்வதும் எனது கனவு.
பாகிஸ்தானாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சிறுபான்மையினருக்கு ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாப்பு தேவை. , இந்த பிரச்சினை மதத்துடன் தொடர்புடையது அல்ல, ஆனால் "அதிகாரத்தை சுரண்டுவது" தொடர்பானது. அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில்  அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்திற்கு  இணைய முடக்கம் மற்றும் சமூக ஆர்வலர

;