india

img

மகாராஷ்டிரா ‘ஆஷா’ ஊழியர்கள் வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி.... மாத ஊதியம் ஆயிரம் ரூபாய் உயர்வு...

புதுதில்லி:
மகாராஷ்டிரா மாநில ‘ஆஷா’ ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி கடந்த ஒன்பது நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவந்தனர். மகாராஷ்டிரா மாநில அரசுஇதற்குப் பணிந்து, தற்போது ஊதியத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் உயர்த்தி அறிவித்திருக்கிறது. அதேபோன்று கோவிட்அலவன்சாக 500 ரூபாயும் அறிவித்திருக் கிறது. இவ்வாறு கோரிக்கைகளை வென்றெடுத்த மகாராஷ்டிரா ‘ஆஷா’ ஊழியர்களுக்கும், வெற்றிக்காகப் பாடுபட்ட மாநிலத் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் சிஐடியு-வின் அகில இந்திய மையத்தின் சார்பில் செயலாளர் ஏ.ஆர்.சிந்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.    (ந.நி.)

;