india

img

92 சதவீத குடும்ப அட்டை ஆதாருடன் இணைப்பு.. பயனாளிகள் எண்ணிக்கை 70.94 கோடி பேர்....

புதுதில்லி:
நாடு முழுவதும் 92.8 சதவீத குடும்ப அட்டைகள் ஆதார்எண்ணுடன் இணைக்கப் பட்டுள்ளது என்றும்  பயனாளிகள் எண்ணிக்கை  70.94 கோடிபேர் உள்ளனர் என்றும்  ஒன் றிய நுகர்வோர் விவகாரம்- பொதுவிநியோகத்துறை இணையமைச்சர் சாத்விநிரஞ்சன் ஜோதி தெரிவித் துள்ளார்.இதுகுறித்து அமைச்சர் மாநிலங்களவையில் எழுத் துப்பூர்வமாக அளித்த பதிலில்  கூறியிருப்பதாவது:

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 21.91 (92.8 சதவீதம்) கோடி ரேசன் அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணியை முடித்துவிட்டன. இதில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 70.94 கோடி (90 சதவீதம்) பயனாளிகள் உள்ளனர். நாட்டில் உள்ள சுமார் 4.98 லட்சம் நியாய விலை கடைகளில் (92.7 சதவீதம்), கடந்த 23 ஆம் தேதி வரை,மின்னணு-விற்பனை இயந்திரங்கள் உள்ளன.

பொது விநியோக திட்டத்தின் கீழ், நாட்டில் 5.38 லட்சம் நியாய விலை கடைகள் செயல்பாட்டில் உள்ளன.உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக பீகாரில் அதிக அளவிலான நியாய விலை கடைகள் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 80,493, மகாராஷ்டிராவில் 52,532, பீகாரில் 47,032, தமிழகத்தில் 34,776 நியாய விலைக் கடைகள் உள்ளன.

அதிகளவில் நெல்-கோதுமை கொள்முதல்
2020-21 காரீப் சந்தை பருவத்தில் 869.29 லட்சம் மெட்ரிக்டன் நெல்லும், 2021-22 ராபிசந்தை பருவத்தில் 433.32 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கொள்முதல் ஆகும்.பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், த்தரகாண்ட், குஜராத், இமாச்சலப்பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 2021-22 ராபி சந்தை பருவத்தில் கோதுமை அதிகளவில் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது.பஞ்சாப், பீகார், குஜராத்,தெலங்கானா, ஜார்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம்,ஒடிசா, தமிழ்நாடு, உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2020-21 காரீப் சந்தை பருவத்தில் அதிகளவிலான நெல்கொள்முதல் செய்யப்பட் டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;