india

img

7 நாளில் புதிய கட்சியை தொடங்கலாம்  தேர்தல் ஆணையம்  ‘அதிரடி’ தளர்வு...

புதுதில்லி:
5 மாநில  சட்டமன்றத் தேர்தலுக்கானதேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் புதிய கட்சிகள் தொடங்குவதற்கான கால அவகாசத்தை ‘அதிரடி’யாக  7 நாளாக குறைத்து இந்திய தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.  இந்த புதிய உத்தரவு  தமிழகம், புதுச்சேரி, கேரளா,  அசாம்,மேற்கு வங்கம்ஆகிய மாநிலங்களுக்கும்  பொருந்தும் என்றும் 26-02-2021க்கு முன்னதாக விண்ணப்பித்தவர்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஏதேனும் ஆட்சேபணை இருந்தால்  மார்ச் 2 அன்று  மாலை  5.30 மணிக்குள்ளும் அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட 30 நாட்களுக்கும் தாக்கல்செய்ய வேண்டும் என்றும் அறிவித் துள்ளது.

;