புதுதில்லி:
5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கானதேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் புதிய கட்சிகள் தொடங்குவதற்கான கால அவகாசத்தை ‘அதிரடி’யாக 7 நாளாக குறைத்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம்,மேற்கு வங்கம்ஆகிய மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றும் 26-02-2021க்கு முன்னதாக விண்ணப்பித்தவர்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் மார்ச் 2 அன்று மாலை 5.30 மணிக்குள்ளும் அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட 30 நாட்களுக்கும் தாக்கல்செய்ய வேண்டும் என்றும் அறிவித் துள்ளது.