புதுதில்லி:
தில்லி போராட்டத்தில் விவசாயிகளின் உயிரிழப்பு 60 ஆக அதிகரித்துள்ளது.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் திங்களன்று 40 ஆவதுநாளாக நடைபெற்று வருகிறது. தில்லியில்கடும் பனிமூட்டம் நிலவி வரும் சூழ்நிலையிலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.சனிக்கிழமை இரவு முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தும் தில்லி எல்லைப் பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், கடும் குளிர்நிலவுவதாலும் அவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுவரை மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையே 6 முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையிலும், உடன்பாடுஎட்டப்படவில்லை. திங்களன்று 7 ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்நிலையில் போராட்டத்தில் விவசாயிகளின் இறப்பும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 16 மணி நேரத்திற்கும் ஒரு விவசாயிஉயிரிழப்பதாகவும் தற்போது வரை போராட்டத்தில் கலந்துகொண்ட 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும் பாரதிய கிசான்யூனியன் (பி.கே.யூ) செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் தெரிவித்தார். விவசாயிகளின் உயிரிழப்புக்கு பதில் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.விவசாயிகள் உயிரிழக்க சாலை விபத்து,கடும் குளிர் எனப் பல காரணங்கள் உள்ளன. சிலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மேவா சிங், (48), திக்ரி எல்லையில் உயிரிழப்பு
டிசம்பர் 7ஆம் தேதி. இடம் தில்லியை ஒட்டியுள்ள திக்ரி எல்லை. 48 வயதான மேவா சிங் போராட்டம் குறித்து ஒரு கவிதை எழுதிக்கொண்டிருந்தார். சில வரிகளை எழுதிய பிறகு தனது கவிதையை நாளை எழுதி முடிப்பேன் என்று நண்பர்களிடம் கூறினார். “நாங்கள் ஒரே அறையில் இருந்தோம், அன்றுஇரவு வெகு நேரம் வரை பேசிக் கொண்டிருந்தோம். மேவா சிங்க்கு பசி எடுத்தது. அவர்சாப்பிட வெளியே சென்றார்’’ என்று அவரதுநண்பர் ஜஸ்விந்தர் சிங் கோரா நினைவுகூர்ந்தார். “ஒரு நபர் வெளியே விழுந்துகிடப்பதாக யாரோ எங்களிடம் கூற வந்தார்கள். நாங்கள் வெளியே ஓடிவந்து பார்த்தபோது மேவா சிங் தரையில் கிடப்பதைக் கண்டோம்’’ என்று அவர் கூறினார். மேவா சிங் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்றதும், மருத்துவமனை யை அடைவதற்கு முன்பே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேவா சிங்கால் தன் கவிதையை கூட முடிக்க முடியவில்லை. அவர் மோகா மாவட்டத்திலிருந்து வந்தவர்.
76 வயதான பாக் சிங், சிங்கு எல்லையில் இறப்பு
பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்த 76 வயதான விவசாயி பாக் சிங் டிசம்பர் 11ஆம் தேதி காலமானார். தனது தந்தை போராட்ட இடத்தில் மிகவும் குளிரான இடத்தில்தங்கியிருந்ததாகவும், கடைசி நாளில் அவருக்கு சிறிது வலி ஏற்பட்டதாகவும், பாக் சிங்கின் மகன் ரகுபீர் சிங் தெரிவித்தார்.பாக் சிங்கின் மரணம் அவரது குடும்பத்தை உலுக்கியுள்ளது. இருந்தபோதும் அவரது குடும்பம் மீண்டும் போராட்டத்தில் கலந்துகொள்ள தயாராக உள்ளது. சட்டம் ரத்து செய்யப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அவரது மருமகள் குல்விந்தர்கவுர் கூறுகிறார். “எனது மாமனார் தனதுகுழந்தைகளுக்காக உயிரைத் தியாகம்செய்தார், நாங்கள் எங்கள் குழந்தைகளுக்காக எங்கள் உயிரைத் தியாகம் செய்வோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
பாபா ராம் சிங், 65, தற்கொலை
ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த ஆன்மீகத் தலைவர் பாபா ராம் சிங் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.விவசாயிகளின் அவல நிலையைப் பார்த்து அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்பட்டது. டிசம்பர் 9ஆம் தேதி முதல் முறையாக சிங்கு எல்லைக்கு சென்றபிறகு அவர்ஒரு குறிப்பை எழுதினார். போராட்ட இடத்தில்அமர்ந்திருந்த விவசாயிகளின் நிலையைப்பார்த்து பாபா மிகவும் மன வருத்தம் அடைந்தார்.போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அரசு புறக்கணிப்பதாக அவர் குற்றம்சாட்டி யிருந்தார்.
அம்ரிக் சிங், 75, திக்ரி எல்லையில் இறப்பு
குர்தாஸ்பூரில் வசிக்கும் அம்ரிக், மற்ற எதிர்ப்பாளர்களுடன் பகதுர்கர் பேருந்து நிலையத்திற்கு அருகே தங்கியிருந்தார். அவர் டிசம்பர் 25ஆம் தேதி குளிர் காரணமாக இறந்தார். “அவர் தனது மூன்று வயது பேத்தியுடன் போராட்டத்தில் அமர்ந்திருந்தார்.போராட்டம் முடியும் வரை அங்கேயே தங்கியிருப்போம் என்று நாங்கள் நினைத்தோம்’’ என்று இறந்தவரின் மகன் தல்ஜித் சிங் குறிப்பிட்டார். “அன்று அவர் காலையில் எழுந்திருக்கவில்லை. நாங்கள் அவரை மருத்துவரிடம் கொண்டுசென்றோம். அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் கூறினார்’’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
யஷ்பால் ஷர்மா, 68, ஆசிரியர், பர்னாலா
டோல் பிளாசாவில் நடந்த போராட்டத்தின் போது யஷ்பால் சர்மா மாரடைப்பால் இறந்தார்.அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் விவசாயியும் கூட. அவர் வழக்கம் போல் அங்குசென்றதாக அவரது மனைவி ராஜ் ராணி கூறுகிறார். ‘அவர் தனக்கு தேநீர் தயாரித்துக்கொண்டார். இப்படி நடக்கும் என்றும் அவர் உயிரற்ற உடலாகத் திரும்புவார் என்றும் நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை,’ என்று கண்ணீர் மல்க ராஜ் ராணி குறிப்பிட்டார். “நான் நடமாடிக்கொண்டிருக்கும்போதே இறந்துவிடுவேன், படுக்கையில் விழமாட்டேன் என்றும் அவர் சொல்லிக்கொண்டிருப்பார். கடவுள் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார். அவர் காரணமாக மக்கள் என்னை மதிக்கிறார்கள். (பிரதமர்) மோதி, போராடிவரும் விவசாயிகளின்பால் செவிசாய்ப்பார் என்றும் மேலும் பலர் இதுபோல உயிரிழக்கமாட்டார்கள் என்றும் நான் நம்புகிறேன்,” என்று ராஜ் ராணி கூறினார்.இப்படிப் பல காரணங்களால் மரணங்கள் நிகழ்ந்தபோதிலும், விவசாயிகளின் மன உறுதி அப்படியே உள்ளது. உயிரிழந்தவர்கள் பற்றிக்குறிப்பிடும்போது தியாகிகள், உயிர் தியாகம்என்றே உணர்ச்சி பொங்கக் குறிப்பிடு கிறார்கள்.“இந்த தியாகங்கள் வீணாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கிறோம். இறுதி வெற்றி வரை எங்கள் போராட்டத்தை தொடருவோம்,” என்று இறந்தவர்களுக்குஅஞ்சலி செலுத்தும் பேரணியில், விவசாயிகளின் தலைவர்களில் ஒருவரான ஜோகிந்தர் சிங் உக்ரஹான் கூறினார். போராட்டத்தில் மேலும் உயிர்த்தியாகங்கள் நிகழக்கூடும். ஆனால் தாங்கள் அதற்கும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
‘நாங்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு விவசாயியை இழந்து கொண்டிருக்கிறோம். இதனால் நாங்கள் வருத்தப்படுகிறோம். ஆனால் நிச்சயமாக எங்கள் மன உறுதி பலவீனமடையவில்லை. மாறாக, ஒவ்வொருமரணத்திலும் எங்கள் மன உறுதி மேலும் பலம்பெறுகிறது,’ என்று விவசாயிகளின் மற்றொரு தலைவரான ஹரிந்தர் கவுர் பிந்து தெரிவித்தார்.