india

img

ஜான்சன்-ஜான்சனின் தடுப்பூசியை பரிசோதிக்க பேச்சுவார்த்தை.....

புதுதில்லி:
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அரசுடன் அந்நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் இரண்டு தவணைகளாக வழங்கப்படக் கூடிய தடுப்பூசிகள். முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்.உலக அளவில் பயன்பாட்டில் உள்ள ஃபைஸர், மாடர்னா, ஸ்புட்னிக்-5 போன்ற பல தடுப்பூசிகளும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளே. இதில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ளது  ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி ஆகும். இந்தத் தடுப்பூசிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன. 

இந்நிலையில் தங்களது தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிப்பதற்காக  ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தரப்பில் கூறுகையில்,  இந்திய அரசுடன் எங்கள் தடுப்பூசியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் முயற்சிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுளோம். உலகம் முழுவதும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கொரோனா தடுப்பூசியைக் கொண்டுவருவதில் நாங்கள் முழுமையாக கவனம் செலுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
 

;