புதுதில்லி:
மத்திய சுகாதாரத்துறை செயலாளர்ராஜேஷ் பூஷன் செவ்வாயன்று தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகளின் ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்க உள்ளன.கொரோனா தடுப்பூசி செலுத்த அனைத்து மாநிலங்களும் முழு அளவில் தயாராக உள்ளன.அடுத்த10 நாட்களில் கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு தயாராக உள்ளோம். சென்னை, கர்னல், மும்பை, கொல்கத்தா ஆகிய நான்கு இடங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இது தவிர நாடு முழுவதும் 37 தடுப்பூசி விற்பனைக்கூடங்கள் உள்ளன.ஜனவரி 13 முதல் முதற்கட்டமாக கொரோனா முன்களப்பணியாளர்களான மருத்துவத் துறையினருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.`