india

img

பரிசோதனையை விட தடுப்பூசியை அதிகரிப்பதே முக்கியம்..... தற்போதைய பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை....

புதுதில்லி: 
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவது பற்றி, முன்னாள் பிரதமர் என்ற வகையில் டாக்டர்மன்மோகன் சிங், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 

இதுதொடர்பாக நேரடியாகவே கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஓராண்டுக்கும் மேல்ஆகிறது.நாட்டின் பல்வேறு நகரங்களிலும், உலகின் பல நாடுகளிலும் வசிக்கும் தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர் பார்க்க முடியவில்லை. தாத்தா - பாட்டிகள் தங்கள் பேரக்குழந்தைகளை சந்திக்க முடியவில்லை. ஆசிரியர்கள் தங்கள் மாணவச் செல்வங்களை வகுப்பறையில் பார்க்க முடியவில்லை.கோடிக்கணக்கானோர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். இந்நிலையில் அதிதீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றின் 2-ஆவது அலையால், மக்கள் தங்கள்வாழ்க்கை எப்போது இயல்பு நிலைக்கு வரும்? என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.தொற்றுநோயை எதிர்த்துப் போராட நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் பல உள்ளன, இந்த முயற்சியில் பெரும்பங்கு தடுப்பூசித் திட்டத்தை நாம் செயல்படுத்துவதில் தான் உள்ளது. இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில் அனைவரையும் உள்ளடக்கிய முன்னெடுப்பு அவசியம் என்பதில் நம்பிக்கை உள்ளவன் என்பதால் உங்களுக்கு சில பரிந்துரைகளை நான் வழங்குகிறேன்.

முதலாவதாக, தடுப்பூசி உற்பத்தியாளர்கள் ஒவ்வொருவருக்கும் எத் தனை தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது, அடுத்த ஆறு மாதங்களில் அவர்கள்விநியோகிக்க ஒப்புக்கொண்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் எத்தனை பேருக்கு தடுப்பூசி போடுவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக அறிவித்தால், தயாரிப்பாளர்கள் அந்த காலத்திற்குள் இந்தஎண்ணிக்கையை உற்பத்தி செய்வதற்கும் அதற்கான ஆர்டர்களை பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும்.இரண்டாவதாக, மாநிலங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி ஒதுக்கீடு குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இது, தனக்குகிடைக்கவேண்டிய அளவு குறித்துமாநில அரசு எந்தவித அச்சமும் இல்லாமல் தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்ள உதவும். உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 10 சதவிகிதத்தை மட்டும் அவசரத் தேவைக்காக மத்திய அரசு தனதுகட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். 
மூன்றாவதாக, முன்கள பணியாளர்கள் யார் என்பதை வரையறுக்கவும், அவர்கள் 45 வயதுக்கு கீழ்இருந்தாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும் மாநில அரசுகளுக்குஅனுமதி அளிக்க வேண்டும். உதாரணமாக பள்ளி ஆசிரியர்கள், பேருந்து, ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், நகராட்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர் கள், வழக்கறிஞர்களை மாநில அரசுகள் முன்கள பணியாளர்களாக அறிவிக்க அனுமதி வழங்கலாம். அவர்கள் 45 வயதுக்கு கீழ் இருந்தாலும் தடுப்பூசி போட அனுமதி வழங்கலாம்.

நான்காவதாக, அரசின் இதுவரையிலான கொள்கைகள் மற்றும் வலுவான அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு ஆகியவற்றின் காரணமாக கடந்த சில தசாப்தங்களாக, இந்தியாஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற் பத்தியாளராக உருவெடுத்துள்ளது. இது பெரும்பாலும் தனியார் துறையில் உள்ளது. பொது சுகாதார அவசர நிலை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், உற்பத்தி வசதிகளை விரைவாக விரிவுபடுத்துவதற்கு தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நிதி மற்றும் பிற சலுகைகளை மத்திய அரசு உட
னடியாக வழங்கி ஆதரவளிக்க வேண்டும். கூடுதலாக, கட்டாய உரிமவிதிமுறை சட்டத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் இது என்று நான்நம்புகிறேன், இதனால் பல நிறுவனங்கள் உரிமம் பெற்று தடுப்பூசிகளை தயாரிக்க முடியும். எச்.ஐ.வி /எய்ட்ஸ் நோயைக் கையாள்வதற் கான மருத்துவ விஷயத்தில் முன்னர் இதுதான் நடந்தது என்பதை நான் நினைவு கூர்கிறேன். தற்போதைய கொரோனா விஷயத்தில், இஸ்ரேல்ஏற்கெனவே கட்டாய உரிமம் வழங்கும் விதிமுறையை நடைமுறைப் படுத்தியுள்ளதாகவும் படித்திருக்கிறேன். எனவே, இந்தியாவும் இதைவிரைவாக செயல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதாக நான் உணர்கிறேன்.

ஐந்தாவது, உள்நாட்டு தடுப்பூசிகுறைவாக இருப்பதால், ஐரோப்பியஅல்லது அமெரிக்க மருத்துவ நிறுவனம் போன்ற நம்பகமான அமைப்புக்களால் பயன்படுத்த அனுமதிக் கப்பட்ட எந்தவொரு தடுப்பூசியை யும், உள்நாட்டு சோதனைகளுக்கு கட்டாயப்படுத்தாமல் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். நாம்முன் எப்போதும் கண்டிராத அவசரநிலையை எதிர்கொள்கிறோம், அவசர காலத்தில் இதுபோன்ற தளர்வு நியாயமானது என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். இதுவரை எத்தனை பேருக்கு இந்தியாவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்பதைப் பார்த்து நாம்பெருமை கொள்ளத் தேவையில்லை, அதற்குப் பதிலாக இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியா தற்போது அதன் மக்கள்தொகையில் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளது. எனவே, சரியான கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலம் இதனை விரைவாக செயல்படுத்த முடியும் என்று கருதுகிறேன்.எனது இந்த பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு அவை மீது உடனடியாக செயல்படும் என்றுநம்புகிறேன்.இவ்வாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

;