india

img

தனியாரை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது.... எஜமானர்களுக்காக கொதித்தெழுந்த மோடி....

புதுதில்லி:
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, பிரதமர் மோடி புதனன்று மக்களவையில் உரையாற்றினார். அதில் அவர் பேசியிருப்பதாவது:

“நாட்டில் தனியார் துறைகளை அவமதிக்கும் போக்கு, கலாச்சாரம் தொடர்ந்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் முக்கியமானவைதான். ஆனால், தனியார் துறைகளும் முக்கியமானவை. தனியார் துறையின் பங்களிப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது.தொலைத்தொட ர்புத்துறையிலும், மருந்துத் துறையிலும் தனியார் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவி செய்கின்றன. ஏழைமக்கள் கூட இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். கடும்போட்டி காரணமாக,மொபைல் போன்களின் விலை மக்கள் எளிதாக வாங்கும் வகையில் இன்று குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் காலத்தில் இந்தியாவால் மனிதநேய உதவிகளை பல நாடுகளுக்கும் செய்ய முடிகிறது என்றால், தனியார் துறை, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பால்தான் அது சாத்தியமாகி இருக்கிறது.எனவே, தனியார் துறைக்கு எதிராக நாம் நமது அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலம் சிலரின் வாக்குகளை கடந்த காலத்தில் பெற்றிருக்கலாம். ஆனால், அந்தக் காலம் கடந்துவிட்டது. தனியார் துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் அவமதிக்கும் கலாச்சாரம், போக்கை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது”. இவ்வாறு பிரதமர் மோடி ஆவேசம் காட்டியுஉள்ளார்.

;