india

img

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்.... சீனத் தூதர் கருத்து....

 புதுதில்லி:
இந்தியாவும் சீனாவும் பரஸ்பர ஒத்துழைப்புடன்செயல்பட வேண்டும். மோதலில் ஈடுபடக் கூடாது என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வீடோங் தெரிவித்துள்ளார். இந்திய இளம்தலைவர்கள் மத்தியில், சீனத்  தூதர் சன் வீடோங்  இணைய வழியில் கலந்துரையாடினார்.  அப்போது அவர் பேசியதாவது:

நாடுகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு. எல்லைப் பிரச்சனை என்பது வரலாற்று காலம் தொட்டு இருக்கக் கூடியது. அதனை இருதரப்பு உறவில் சரியான இடத்தில் வைக்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலமாகவே எல்லைப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் சீனா நம்பிக்கைகொண்டுள்ளது. அதே நேரத்தில் தேசப் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் வளர்ச்சிக்கானநலன்களை பாதுகாக்கும் உறுதிப்பாட்டில் நாங்கள்உறுதியாக இருக்கிறோம். இந்தியாவும் சீனாவும்ஒருவருக்கொருவர்  மதிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் சமமாக நடத்த வேண்டும். கருத்து வேறுபாடுகளை தீர்க்க பேச்சுவார்த்தைகள் நடத்தவேண்டும். இதில் இரு தரப்பிலும்ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும்.இந்தியாவும் சீனாவும் பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும். மோதலில் ஈடுபடக் கூடாது. கொரோனா தொற்று நோயை கையாளுவதிலும் பொருளா தாரத்தை புதுப்பிப்பதிலும் தற்போது கவனம் செலுத்த வேண்டும். கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா பாதிக்கப்பட்டபோது அதற்கு முதலில் உதவ முன்வந்த நாடுகளில் சீனாவும் ஒன்று. இவ்வாறு அவர் பேசினார்.

;