india

img

சாதிப்பெயரை வாகனங்களில்  எழுதிய 600 பேருக்கு அபராதம்....

புதுதில்லி:
தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் வாகனங்களில் தங்களது பெயருடன் சாதிப்பெயரையும் எழுதிய 600 பேருக்கு  அபராதம் விதிக்கப்பட்டது.தில்லி  பகுதிகளில்  தங்களது  வாகனங்களில்  நம்பர் பிளேட்டுகளிலும்  வண்டி எண்ணுடன் சேர்த்தும் சாதிப்பெயர்
‘ஸ்டிக்கரை’ ஒட்டி வண்டி ஓட்டும் பழக்கம் பரவியுள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கவுதம புத்தர் நகர்காவல்துறை ஆணையாளர் அலோக் சிங் உத்தரவிட்டார்.இதனைத்தொடர்ந்து நொய்டா மற்றும் கிரேட்டர்நொய்டா பகுதிகளில் காவல்துறையினர் நடவடிக்கையில்ஈடுபட்டு, சாதி பெயர் பொறித்த ‘ஸ்டிக்கர்’ ஒட்டி கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தோரை மடக்கிப் பிடித்தனர். சாதிப்பெயர் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரை  கிழித்து எறிந்தனர்.போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததாக குற்றம்சாட்டி அந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.சனிக்கிழமையன்று மட்டும் 600 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

;